சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தின் ஷூட்டிங் விஜய் நடிப்பில் விறுவிறுப்பாக நடப்பதாக தயாரிப்பாளர் லலித்குமார் தெரிவித்தார். ஹீரோவாக நடித்து வந்த அர்ஜுன், மணிரத்னம் இயக்கிய கடல், விஷால் நடித்த இரும்புத்திரை ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அடுத்த படத்தில் அர்ஜுன் வில்லனாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் சஞ்சய் தத், நிவின் பாலி, மிஷ்கின், கவுதம் மேனன் ஆகியோருடன் அர்ஜுனும் வில்லனாக நடிக்க இருக்கிறார். இது கேங்ஸ்டர்கள் பற்றிய கதையாக உருவாகிறது. இதில் நடிப்பதற்காக தனது கெட்அப்பை அர்ஜுன் மாற்றியுள்ளார்.
விருமாண்டி படத்தில் கமல்ஹாசன் வளர்த்த நீளமான மீசையை போல் அர்ஜுன் வளர்த்திருக்கிறார். அதேபோல் தனது தலைமுடியையும் வளர்த்திருக்கிறார். சமீபத்தில் படத்தின் அறிவிப்பை வெளியிடுவதற்கான புரோமோ ஷூட் நடத்தப்பட்டது. இதில் விஜய்யுடன் அர்ஜுனும் மற்ற வில்லன் நடிகர்களும் கலந்துகொண்டதாக தெரிகிறது. இதையடுத்து படத்தின் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஹீரோயினாக திரிஷா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். லலித்குமார் தயாரிக்கிறார். தயாரிப்பாளர் லலித்குமார் வெளியிட்ட அறிக்கையில் ‘மாஸ்டர், வாரிசு படங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணை கிறேன். படப்பிடிப்பு விறுவிறுப் பாக நடந்து வருகிறது’ என்றார்.